கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

கடையநல்லூர் பகுதிகளில் உருத்தெரியாமல் சிதையும் குளங்கள்

10 அடி ஆழம் வரை மண் தோண்டுவதால் விவசாயம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 
தமிழகத்தில் உள்ள குளங்களில் வண்டல், கரிசல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கியது. விவசாயிகள் மற்றும் செங்கல் தயாரிக்கும் சிறுதொழில் முனைவோர் வருவாய்த்துறையிடம் அனுமதி பெற்று மண் அள்ளினர். இந்தாண்டு ஆளும் கட்சியினர் ஆதாயம் பெற அரசு வழிவகை செய்தது. 
அதன்படி ஆளும் கட்சியினர் கனிம வளத்துறையிடம் பாஸ் பெற்று விவசாயிகள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களிடம் விற்பனை செய்தனர். இதனால் கடந்த ஆண்டுகளில் லோடுக்கு ரூ.80 வரை செலுத்தி வண்டல் மண் அள்ளி விளைநிலங்களை மேம்படுத்திய விவசாயிகள் தற்போது ரூ.500 செலுத்தி மண் அள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
குளங்களில் 1 மீட்டர் அளவுக்கு மண் அள்ள அரசு அனுமதி வழங்கிய போதிலும் விதிமுறைகளை மீறி 10 அடிக்கு மேல் மண் அள்ளப்படுகிறது. இதனால் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். 
கடையநல்லூர் பகுதி யில் உள்ள நொச்சி குளம், பார்வதிகுளம், பரமேஸ்வரிகுளம் உள்ளிட்ட பல் வேறு குளங்களில் அள வுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதால்  இயற்கை வளம் அழிவதுடன், மடை களில் இருந்து தண்ணீர் வெளியேற்ற முடியாததால் 
விவசாயமும் பாதிக்கப்படும்.  மேலும் குளங்களில் தண்ணீர் பெரும் நேரங்களில் குளிக்க செல்லும் சிறுவர்கள் ஆபத்தில் சிக்கும் அபாயமும்ஏற்பட்டுள்ளது. 
குளங்களில் வண்டல், கரம்பை, கரிசல் போன்ற மண்கள் அள்ளப்படுவதோடு மணலும் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு குளத்திற்கும் தனித்தனியாக பாஸ் வழங்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட குளத்தில் மட்டும் அல்லாமல் எந்த குளத்திலும், எப்போதும் அள்ளலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. 
விதிமீறல்கள் குறித்து அப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்பினால் போலீஸ் மூலம் மிரட்டுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர். பல குளங்களில் விதிகளை மீறி மண் அள்ளுவது குறித்து விவசாயிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போதிலும் இதுபற்றிகண்டுகொள்ளாமல் மண் அள்ளுவதில் மும்முரமாக உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக