நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 40). இவர் போர்வெல் லாரியில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார். தற்போது போர்வெல் லாரியுடன் கடையநல்லூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து வந்தார். நேற்று கடையநல்லூர் பகுதியில் அட்டை குளம் கிராமத்தில் போர்வெல் லாரியில் மோகன் தங்கி இருந்தார்.
அப்போது அவருக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மோகன் வழிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் அவர் வயிற்றுவலி காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அல்லது தற்கொலை செய்தாரா என்று கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக