கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கடையநல்லூர் வட்டாரத்தில் விதை நேர்த்தி செயல்விளக்க முகாம்

கடையநல்லூர் வட்டாரத்தில் வேளாண்துறை சார்பில் மண்மாதிரி மற்றும் விதை நேர்த்தி செயல்விளக்க முகாம் நடந்தது.
கடையநல்லூர் வட்டாரம் புன்னையாபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விதை நேர்த்தி மற்றும் மண்மாதிரி செயல்விளக்க முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் தலைமை வகித்தார். முன்னோடி விவசாயி ராமர் முன்னிலை வகித்தார். இதில் ரைசோபியம் மூலம் விதை நேர்த்தி செய்வது குறித்தும், மண் மாதிரி எடுப்பது பற்றியும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சங்கரநாராயணன் செயல்விளக்கம் அளித்தார்.
* அட்மா திட்டத்தின் கீழ் கம்பனேரி கிராமத்தில் ஒன்றியக்குழு தலைவர் பெரியதுரை முன்னிலையில் நடந்த முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் மண்மாதிரி எடுப்பது பற்றியும், உளுந்து விதைகளை சைரோபியம் கொண்டு விதைநேர்த்தி செய்வது குறித்தும் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து உதவி வேளாண்மை அலுவலர் நாராயணன் பேசினார். சங்கரநாராயணன் செயல்விளக்கம் அளித்தார். செல்வராஜ் நன்றி கூறினார்.
* கடையநல்லூர் வட்டாரம் கொடிக்குறிச்சி கிராமத்தில் பஞ்., தலைவர் முத்தையா முன்னிலையில் கடையநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் மண்மாதிரி மற்றும் விதை நேர்த்தி செயல்விளக்கம் குறித்து பேசினார். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
* நயினாரகரம் கிராமத்தில் நடந்த மண்மாதிரி மற்றும் விதை நேர்த்தி செயல்விளக்க முகாம் அட்மா தலைவர் வசந்தம் முத்துப்பாண்டி முன்னிலையில் கடையநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் தலைமையில் நடந்தது. முகாமில் உளுந்து விதைகள் சைரோபியம் மூலம் விதை நேர்த்தி செய்வது குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை தொழில்நுட்ப வல்லுநர்கள் டாங்கை மற்றும் கணேசன் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் ராமநாராயணன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக