கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 12 செப்டம்பர், 2012

புளியங்குடியில் செல்போன் டவர் செட்-டாப் பாக்ஸ் வெடித்து விழுந்து தொழிலாளி படுகாயம்

புளியங்குடியில் செல்போன் டவர் செட்-டாப் பாக்ஸ் வெடித்து சிதறி வீட்டில் விழுந்ததில் தொழிலாளி படுகாயமடைந்தார்.
புளியங்குடி ஆர்எஸ்கேபி ரோட்டில் தனி யார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவருக்கு தென்புறம் சண்முகசுந்தர விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தொழிலாளி அண்ணாமலை (25) என்பவரது வீடு உள் ளது. நேற்று மதியம் தனி யார் செல்போன் டவரில் இருந்த செட்-டாப் பாக்ஸ் திடீரென வெடித்து சிதறியது. இதில் 20 கிலோ எடையுள்ள பாக்ஸ் துண்டு அண்ணாமலையின் ஓட்டு வீட்டில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அண்ணாமலை படுகாயத்துடன் உயிர்தப்பினார். அவர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக