கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 6 செப்டம்பர், 2012

கடையநல்லூரில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் ஜோசப் மெட்ரிக் பள்ளிக்கு சாம்பியன் பட்டம்



கடையநல்லூரில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் ஜோசப் மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இப்போட்டிகளில் கடையநல்லூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 36 அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் மீனாட்சிபுரம் ஜோசப் மெட்ரிக்பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. பெண்கள் பிரிவில் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டம் வென்றது.விழாவில் மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, மாணவரணி துணை செயலாளர் யாத்ராபழனி, கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பத்மநாதன், உடற்கல்வி இயக்குநர் முகம்மது அலி ஜின்னா, உற்பயிற்சி ஆசிரியர்கள் ராஜேந்திரன், முகம்மது இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய இந்தியாவின் ஒலிம்பிக் வீரராக, தங்கப் பதக்கம் பெறும் வீரராக இவர்களில் ஒருவர் அல்லது இவர்களைப் போன்று உங்களிடம் பயிற்சி பெறுபவர்களில் ஒருவர் உருவானாலும் சந்தோஷமே. எதிர்பார்ப்போம். உங்கள் பயிற்சி அதற்கு தூண்டுகோலாகவும், திறனை வளர்க்கவும் உதவும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் இப்ராஹிம் மாஸ்டர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக