கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 5 செப்டம்பர், 2012

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 54 பேர் உயிரிழப்பு

சிவகாசியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் இருக்கிறது முதலிப்பட்டி. இங்கு இருக்கும் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் இன்று காலையில் திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 45 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை, சிவகாசி, விருதுநகர் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக