kadayanallur
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளித்த, மத்திய அரசின் முடிவை கண்டித்து, எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, நாடு தழுவிய, "பந்த்'திற்கு, வர்த்தகர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனால், பல மாநிலங்களில், மக்களின் சாதாரண வாழ்க்கை பாதிக்கப்பட்டு, "பந்த்' வெற்றி பெற்றது. ஆனாலும், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. டீசல் விலை உயர்வு, சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகத்தில் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி போன்ற, மத்திய அரசின் சமீபத்திய முடிவுகளைக் கண்டித்து, பாரதிய ஜனதா, தெலுங்கு தேசம், சமாஜ்வாதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், நாடு தழுவிய, "பந்த்'திற்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தன. லாரி உரிமையாளர்களும், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களும், வர்த்தகர்களும், இந்த, "பந்த்'திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
தமிழகத்திலும், வர்த்தகர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்திருந்ததால், "பந்த்' முழு அளவில் வெற்றி பெற்றது. பெரும்பாலான மாநிலங்களில், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும், பஸ், ரயில் போக்குவரத்தில், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அரசியல் கட்சியினரின் வற்புறுத்தல் இல்லாமலேயே, வர்த்தகர்கள், தங்கள் கடைகளை மூடி, அமோக ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையநல்லூரிலும் பந்த் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது . காலை 10.30 மணியளவில் கம்யூனிஷட் கட்சியை சார்ந்த சிலர் ஒரு சில கடைகள் மட்டும் திறந்த கடைகளை அடைக்க கோசம் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்து சேனைத்தலைவர் மண்டபத்தில் அடைத்து பின்பு விடுவித்தனர் நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதாலும் சிறிது பதற்றம் காணப்பட்டது அனால் போலீஸ் அதிகளவு இருந்த்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக