கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 10 செப்டம்பர், 2012

கடையநல்லூர் அருகே மரத்தில் கார் மோதி இருவர் சாவு

கடையநல்லூர் அருகே கார் மரத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
 திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள அழகாபுரியைச் சேர்ந்த சிலர் சனிக்கிழமை இரவு குற்றாலத்துக்குச் சென்று குளித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
 காரை அழகாபுரியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (40) ஓட்டி வந்துள்ளார். கார் சொக்கம்பட்டி காவல் நிலையம் அருகே வந்த பொழுது நிலை தடுமாறி சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதியதாம்.
 இதில் காரில் பயணம் செய்த ஆறுமுகம் மகன் சேகர் (32), முத்துவீரன் மகன் கருப்பசாமி (40) ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 மேலும் காரில் பயணம் செய்த அழகாபுரியைச் சேர்ந்த மாடசாமி (22), சேகர் (22), கருணாகரன் (18), வேலுச்சாமி (20), செல்வராஜ் (28), கார் டிரைவர் ரமேஷ்குமார் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த சரவணன் (19) ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இது குறித்து சொக்கம்பட்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக