கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 8 செப்டம்பர், 2012

கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்த்திடும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்த்திடும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக நகராட்சி தலைவி சைபுன்னிசா தெரிவித்தார்.கடையநல்லூர் நகராட்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குடிநீர் வினியோகம் சீராக கிடைத்திடவும், தட்டுப்பாட்டை நீக்கி அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்யவும் நகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் நாள்தோறும் வருகை தந்து வலியுறுத்தி வரும் சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. இதனிடையில் நகராட்சியில் குடிநீர் வினியோகம் 10 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.போதுமான நீர்பிடிப்பு ஆற்றுப்படுகையில் இல்லாத நிலையிலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திலான தண்ணீரும் சீராக கிடைக்கப் பெறாத நிலையில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து நகராட்சி தலைவி சைபுன்னிசா கூறியதாவது:-கடையநல்லூர் நகராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அதனை சமாளித்திட நகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகம் சீராக கிடைக்கப் பெறவில்லை என கூறப்பட்டு வரும் நிலையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திடும் பொருட்டு நகராட்சி பொதுமக்களின் நலன் கருதி லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் நகராட்சியில் குடிநீர் வினியோகம் மேற்கொள்ள பொதுமக்களின் நலன் கருதி 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென நகராட்சி நிர்வாக ஆணையாளரிடம் வலியுறுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக