கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 5 செப்டம்பர், 2012

குற்றாலம் மெயின் அருவில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு

குற்றாலம் மெயின் அருவில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுமார் 7 மணி நேரம் குளிக்க தடை விதிக்கப்பட்டது.குற்றாலம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் அவ்வப்போது தண்ணீர் அதிகரித்தவண்ணம் உள்ளது. சீசன் களை கட்டியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அலைமோதுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை பெய்து வருவதால், நேற்று குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக மெயின் அருவியில் சுமார் 7 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுந்தது. மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்த மகிழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக