கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 14 மே, 2012

கடையநல்லூரில் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொசு வலை


கடையநல்லூரில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொசு வலைகள் வழங்கப்பட்டது.

கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தவ்ஹீத் ஜமாத் ரஹ்மானியாபுரம் மற்றும் டவுன் கிளை சார்பில் 20 படுக்கைகளுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணன், டாக்டர் சண்முகையா பாண்டியன், நகராட்சி சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் குறிச்சிகுளம் சுலைமான், புளியங்குடி செய்யதுஅலி, செயலாளர் ஹாஜா முகைதீன், தலைவர் செய்யது மசூது, மருத்துவ அணி சாகுல்ஹமீது உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக