கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 15 மே, 2012

குலுக்கல் மூலம் தமிழக ஹஜ் பயணியர் தேர்வு மே 15 அன்று சென்னையில் நடைபெறும்!


இந்திய ஹஜ் குழு மூலம் - தமிழகத்தில் இருந்து இவ்வாண்டு பயணம் மேற்கொள்ளவுள்ள பயணியரை தேர்வு செய்ய குலுக்கல், மே 15 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை வருமாறு:

1. ஹஜ் 2012-ல் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழ் நாட்டைச் சேர்ந்த 12,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள், தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3000 மட்டுமே. எனவே, மத்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, ஹஜ் 2012-ற்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய, குலுக்கலை (குறா) நடத்த தமிழ் நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி 15.05.2012 (செவ்வாய்கிழமை) அன்று மாலை 3.00 மணியளவில், சென்னை, இராயப்பேட்டை, புதுக் கல்லூரி வளாகத்திலுள்ள ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

2. தமிழ் நாடு மாநில ஹஜ் குழு மூலமாக ஹஜ் 2012-ல் ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பித்துள்ள புனிதப் பயணிகள், இக்குலுக்கலில் (குறாவில்) கலந்து கொண்டு நிகழ்ச்சியினை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை.

1 கருத்து:

  1. குலுக்கல் மூலம் தமிழக ஹஜ் பயணியர் தேர்வு மே 15 அன்று சென்னையில் நடைபெறும்!

    http://hajjtn.in/

    இந்த இணையதளத்தில் பார்த்துக்கொள்ளவும்

    பதிலளிநீக்கு