கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 14 மே, 2012

கடையநல்லூரில் வரும் கல்வியாண்டிலேயே கலைக்கல்லூரி துவக்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி அறிவிப்பு

கடையநல்லூரில் வரும் கல்வியாண்டிலேயே கலைக்கல்லூரி துவக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக., செயல்வீரர்கள் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை அதிமுக வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கதர் மற்றம் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் துரையப்பா, முத்துசெல்வி, இளைஞரணி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், தென்காசி நகராட்சி தலைவர் பானு, வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் மாடசாமிபாண்டியன், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள்ராஜ், சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட செயலாளர் நயினாமுகம்மது, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் துரை, குற்றாலம் டவுன் பஞ்.,தலைவர் லதா முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் தீர்மானங்களை வாசித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக