கடையநல்லூர் நகராட்சி கூட்டம் தலைவி சைபுநிஷா தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத் தலைவர் ராசையா, இளநிலை பொறியாளர் அகமதுஅலி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடைநல்லூர் நகராட்சி பகுதியில் காணப்படும் சுகாதார சீர்கேடு குறித்து கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், கணபதி, முத்தையாபாண்டி மற்றும் கவுன்சிலர்கள் சிலர் புகார் எழுப்பினர். காய்ச்சல் பணிகளில் பணியாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவார காலத்தில் விடுபட்ட சுகாதார பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெறும் என சுகாதார அலுவலர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக