கடையநல்லூரில் குடிநீர் அபிவிருத்தி பணிகளுக்காக வரும் 23ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு குடிநீர் "கட்' செய்யப்படுகிறது.
இதுகுறித்து கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) தங்கராஜ் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அபிவிருத்தி திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியின் கீழ் கருப்பாநதி, பெரியாற்றுப்படுகையில் முக்கிய பணிகள் வரும் 23ம் தேதி முதல் துவங்கப்பட இருப்பதால் சுமார் ஒருவார காலத்திற்கு குடிநீர் வினியோகம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒருவார காலத்திற்கு தேவையான குடிநீரை சேமித்து வைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக