கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 15 மே, 2012

தொழுகை நேரங்களில் மின் வெட்டு : இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

தொழுகை நேரங்களில் மின் வெட்டு ஏற்படுத்துவதற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாளில் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் முகம்மது தீனுல் ஹாரீஸ் மற்றும் பலர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
மேலப்பாளையம், பேட்டை மற்றும் பாளை பகுதிகளில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். வெள்ளிக் கிழமையில் ஏற்படும் மின் தடையால் தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மின் விசிறி மற்றும் ஒலி பெருக்கி வசதி இல்லாமல் தொழுகை பாதிக்கப்ப்டடுள்ளது.எனவே, வெள்ளிக் கிழமை சிறப்பு தொழுகை நாளில் மின் வெட்டு ஏற்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக