கடையநல்லூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் நெல்லை மஜூத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு ஒரு பெண்ணும் பலியாகியுள்ளார். நூற்றுக்கணக்கானோர் நெல்லை, மதுரை போன்ற பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களிடையே பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே இந்த காய்ச்சலை கட்டுபடுத்த தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்த மர்ம காய்ச்சல் பரவலை தடுக்க கடையநல்லூரில் ஒரு நிரந்தர மருத்துவக்குழு செயல்படவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு ஒரு பெண்ணும் பலியாகியுள்ளார். நூற்றுக்கணக்கானோர் நெல்லை, மதுரை போன்ற பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களிடையே பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே இந்த காய்ச்சலை கட்டுபடுத்த தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க உத்தரவிட வேண்டும். மேலும் இந்த மர்ம காய்ச்சல் பரவலை தடுக்க கடையநல்லூரில் ஒரு நிரந்தர மருத்துவக்குழு செயல்படவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக