கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

தமிழகத்தில் 33 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

தமிழகத்தில், 2012 ஏப்ரல் 9 வரை, 33 நபர்கள் இந்த நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. சென்னை கோவை, திருப்பூர் மற்றும் சில மாவட்டங்களில் தற்போது இந்நோய் காணப்படுகிறது.  இதில் சென்னையில் 18 பேரும், கோவையில் 11 பேரும், திருப்பூர், கடலூர், திருவள்ளுர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இத்தகவலை தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில்,
பன்றிக்காய்ச்சல்  நோய்க்கு ஆய்வக பரிசோதனை
பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகப்படும் நபரின் சுவாச மண்டலத்தில் இருந்து தொண்டை தடவல்  மாதிரிகள் சேகரிக்கப்பட்டு RT - PCR எனும் பரிசோதனை மூலமாக இந்நோய் உறுதிப்படுத்தப்படுகிறது. கிண்டி அரசு கிங் நிலையம், சென்னை,  மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக இப்பரிசோதனை செய்யப்படுகிறது.


மேலும் தமிழகத்தில் 12 தனியார் ஆய்வகங்களில்  இந்த பரிசோதனை செய்ய உரிய கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்த பின்னர்  அரசு  அனுமதி வழங்கியுள்ளது.


பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து
பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இருப்பவர்கள்  அருகிலுள்ள மருத்துவரை அணுகி   ஆரம்ப நிலையிலேயே  கண்டறிந்து ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகளை உட் கொள்வதால் முழுமையாக இந்நோயை குணப்படுத்த முடியும். இதன் மூலம் இறப்பினை தவிர்க்கலாம். பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ஒசால்டாமாவீர் (டாமிப்ளு) மருந்துகள் போதுமான அளவு (4 இலட்சம்) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது. குழந்தைகளுக்கு தேவையான  சிரப் ஒசால்டாமாவீர் (டாமிபுளு) மருந்துகள் வாங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக