கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

கடையநல்லூரில் நள்ளிரவில் வீடு புகுந்துபெண்ணிடம் நகை பறிப்பு


கடையநல்லூரில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இஸ்கானுல்லா மனைவி பர்வீன் (32). இஸ்கானுல்லா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் பர்வீன் தூங்கி கொண்டிருந்தாராம். வீட்டின் பின்புறத்தின் வழியாக வந்த மர்மஆசாமி பர்வீன் கழுத்தில் கிடந்த செயினை கத்தியை காட்டி மிரட்டி கழற்ற சொன்னாராம். இதற்கு பர்வீன் மறுக்கவே மர்ம ஆசாமி பலவந்தமாக செயினை பறித்து தப்பியோடிவிட்டான்.

தொடர்ந்து பர்வீன் போட்ட சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மர்ம ஆசாமி பறித்து சென்ற தங்க நகை சுமார் 35 கிராம் எனவும், இதன் மதிப்பு சுமார் 2 லட்ச ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

நள்ளிரவில் பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்ற இச்சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக