கடையநல்லூர் அருகே பள்ளி வேன் மரத்தில் மோதியதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். தென்காசியில் மதுரை ரோட்டில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மேலகரத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் இன்று காலை பள்ளி வேன் மூலம் பள்ளிக்கு சென்றனர்.
வேனை ஆவுடையானூரை சேர்ந்த வேல்முருகன் ஓட்டினார். குத்துக்கல்வலசை அருகே செல்லும் போது திடீரென வேன் அங்குள்ள மரத்தில் மோதியது. இதில் வேனில் வந்த மாணவர்கள் இசக்கிமுத்து (வயது 15) உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு தென்காசி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக