கடையநல்லூர் அருகே 60அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டனர்.
கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பாநதி அணையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் கலா என்ற பெண் பசுமாட்டை கட்டிவிட்டு வயல் வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது கட்டப்பட்ட கயிறு அவிழ்ந்த நிலையில் அப்பகுதியிலிருந்து சென்ற பசுமாடு அங்கிருந்த 60அடி ஆழம் உள்ள கிணற்றில் திடீரென விழுந்துவிட்டது. மாடு கிணற்றில் விழுந்ததால் அப்பகுதியில் இருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து கடையநல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) மாரியப்பன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் சிக்கி தவித்து போராடிக் கொண்டிருந்த மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதியில் இருந்த விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக