கடையநல்லூர் - ஆத்தங்கரை பள்ளிவாசல், சங்கரன்கோவில் - சென்னை வழித்தடங்களில் புதிய பஸ்களை அமைச்சர் செந்தூர்பாண்டியன் இன்று (8ம் தேதி) துவக்கி வைக்கிறார்.
கடையநல்லூரில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். நேரடி பஸ் இந்த வழித்தடத்தில் இல்லாததால் தென்காசி, திருநெல்வேலி வழியாக ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு இப்பகுதி மக்கள் சென்று வந்தனர். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு நேரடி பஸ் வசதி செய்யப்படுமென அமைச்சர் செந்தூர்பாண்டியன் உறுதியளித்திருந்தார்.
இதனையடுத்து கடையநல்லூரில் இருந்து தென்காசி, கடையம், பொட்டல்புதூர், அம்பை, களக்காடு, நான்குநேரி வழியாக ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு இன்று முதல் பஸ் இயக்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு கடையநல்லூரில் இருந்து புதிய வழித்தடத்தில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் பஸ்சை இயக்கி வைக்கிறார். மேலும் சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் புதிய பஸ் இயக்கப்படுகிறது. மதியம் 12.30 மணிக்கு இந்த பஸ்சை அமைச்சர் செந்தூர்பாண்டியன் இயக்கி வைக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக