கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

கடையநல்லூரில் பரவும் மர்மக் காய்ச்சல்

கடையநல்லூர் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்தும்,அவர்கள் எவ்வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் 30 பேர் கொண்ட குழுவின் மூலம் ஏப்.9(திங்கள்கிழமை) முதல் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரான்மைதீன் சனிக்கிழமை தெரிவித்தார்.


கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் மட்டுமே காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கும் சாதாரண வகை காய்ச்சலே ஏற்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி பகுதியிலுள்ள மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.


இதில் டையநல்லூரைச் சேர்ந்தவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும் கடையநல்லூர் பகுதியில் முன் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வருகிறது.  மேலும் அபேட் மருந்தும் ஊற்றப்பட்டு வருகிறது. சனிக்கிழமை நகராட்சி துப்புரவு ஆய்வாளர்களுடன் கடையநல்லூர் பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் அவ்வாறு காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.


விழிப்புணர்வு பிரசாரம்: கடையநல்லூரில் கடந்த ஆண்டில் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதன் காரணமாக சாதாரண காய்ச்சலுக்கே மக்கள் அச்சப்படுகின்றனர். இதைப் போக்கும் வகையில் சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதுவரை எடுத்த ரத்த மாதிரிகளில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக