கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கடையநல்லூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நகராட்சி ஊழியர்கள் விசாரணை செய்து கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் மூலம் ரத்த தடவல்கள் மற்றும் ரத்த மாதிரிகள் ஆய்விற்காக எடுக்கப்பட்டும், நோயுற்றவர்களை கண்டறிந்து சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


நகராட்சி பகுதிகளில் கொசு புழு ஒழிப்பு மற்றும் கொசு ஒழிப்பு தொடர்பான அறிவுரைகள் பூச்சியியல் வல்லுனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. போதுமான அளவு கொசுப் புழு கொல்லி மருந்து நகராட்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக