கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 28 ஏப்ரல், 2012

கடையநல்லூர் அருகே சாலையில் விழுந்த மரத்தினால் போக்குவரத்து பாதிப்பு

கடையநல்லூர் அருகே சாலையில் வியாழக்கிழமை விழுந்த மரத்தினால் தென்காசி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 கடையநல்லூர் வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.
 இதன் காரணமாக குமந்தாபுரம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த பெரிய மரம்
 சாலையில் விழுந்தது. எனவே தென்காசி-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 தகவலறிந்த கடையநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர்கள் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக