கடையநல்லூர் ரத்னா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மாரியப்பன், நாராயணன் ஆகியோருக்கு சிறந்த அறிவியல் ஆய்வுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த அறிவியல் படைப்புக்களை உருவாக்கிய இப் பள்ளி மாணவர்கள் மாரியப்பன், நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ. 3,000 மற்றும் விருது வழங்கப்பட்டது. மாணவர்களை பள்ளி நிர்வாகி பிரகாஷ், செயலர் மாடசாமி, தலைமைஆசிரியை சக்திவடிவு உள்ளிட்டோர் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக