கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 31 ஜூலை, 2012

கடையநல்லூர் மின்கோட்டத்தில் நாளை முதல் மின்தடை நேரம் மாற்றம்

கடையநல்லூர் மின்கோட்டத்தில் நாளை (1ம் தேதி) முதல் மின்தடை சுழற்சி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

""கடையநல்லூர் மின்கோட்டத்தில் உள்ள கடையநல்லூர், புளியங்குடி, வீரசிகாமணி, நாரணபுரம், விஸ்வநாதப்பேரி உபமின் நிலையங்களில் மின்தடை சுழற்சி நேரம் நாளை (1ம் தேதி) முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் உபமின் நிலையத்தில் டவுன்-1, 2 பீடர்களில் காலை 9-12, கடையநல்லூர் ரூரல் மற்றும் நயினாரகரம் பீடர்களில் 12-3, மில் பீடரில் மதியம் 12-3, கம்பனேரி பீடரில் காலை 9-12 மின்தடை இருக்கும்.

புளியங்குடி உபமின் நிலையத்தில் டவுன் பீடரில் மதியம் 12-3, சொக்கம்பட்டி பீடரில் மாலை 3-6, வீரசிகாமணி உபமின் நிலையத்தில் சேர்ந்தமரம் பீடரில் மாலை 3-6, ஊத்தான்குளம் பீடரில் மதியம் 12-3, வலசை பீடரில் காலை 9-12, நாரணபுரம் உபமின் நிலையத்தில் சிந்தாமணி பீடரில் காலை 9-12, நெற்கட்டும்செவல் பீடரில் காலை 6-9, ராயகிரி பீடரில் மாலை 12-3, விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் சிவகிரி, வழிவழிகுளம், விஸ்வநாதப்பேரி ஆகிய பீடர்களில் காலை 6-9, தேவிப்பட்டிணம் பீடரில் மதியம் 12-3 மின்தடை சுழற்சி நேரம் இருக்கும்'' என மின்கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக