கடையநல்லூர் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் அல்ஹாஜ் இக்பால் தலைமை வகித்தார். தென்காசி ஹாஜி முஸ்தபா அதிபர் கமால் முஹ்யித்தீன், டாக்டர் அப்துல்அஜீஸ், அன்சாரியா, மகளிர் அரபிக் கல்லூரி தலைவர் முஹம்மது இஸ்மாயில், கயத்தார் ஷாஜகான், ஈரோடு அல்அமீன் கல்லூரிகள் தலைவர் ஜபருல்லாஹ், கடையநல்லூர் முஹம்மது யூசுப் முன்னிலை வகித்தனர்.கல்லூரி துணை முதல்வர் முஹ்யித்தீன் வரவேற்றார். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் அப்துஷ்ஷக்கூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மேலப்பாளையம் அன்னை ஹாஜரா மகளிர் கல்லூரி தாளாளர் செய்யது அஹ்மது பேசினர். 24 மாணவர்களுக்கு ஆலிம் பைஜி பட்டமும், 2 மாணவர்களுக்கு ஹாபிழ் பட்டமும் வழங்கப்பட்டது.
கல்லூரி துணை முதல்வர் நன்றி கூறினார்.
கல்லூரி துணை முதல்வர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக