கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 4 ஜூலை, 2012

குரூப் 4 தேர்வுக்கு ஆன்-லைனில் ஹால் டிக்கெட்... செல்போன் மூலம் டி.என்.பி.எஸ்.சி "எஸ்.எம்.எஸ்'

குரூப் 4 தேர்வுக்கு ஆன்-லைனில் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய விண்ணப்பதாரர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி சார்பில் குரூப் 4 தேர்வுகள் வரும் 7ம் தேதி நடக்கிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வுகள் முறையாக நடக்கும் வகையில் தேர்வு மையங்கள் முழு அளவில் வீடியோ மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு முதன் முறையாக ஆன்-லைனில் தகுதியானவர்கள் விண்ணப்பித்தனர். இதே போல், ஹால் டிக்கெட்களும் விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு அனுப்பபடாமல் ஆன்-லைன் மூலமே ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யவும் வசதி செய்யப்பட்டது. இந்த வசதியை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 7ம் தேதி ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் காலை முதல் மாலை வரை தேர்வுகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் செல்போன்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் "எஸ்.எம்.எஸ்' அனுப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விண்ணப்பதாரர்களுக்கும் பெயரை குறிப்பிட்டு, ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய "அட்வைஸ்' விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்ப எண்ணையும் குறிப்பிட்டு டவுன்லோடு செய்ய வேண்டிய வெப்சைட் http://tnpscexams.net/callletter/tnpsc_142012/index.php தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பத்தை டவுன்லோடு செய்திருந்தால் இந்த எஸ்.எம்.எஸ் தகவலை தவிர்க்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மையங்களுக்கு வினாத்தாள்கள்: இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து அனுப்பபட்டு வருகிறது. இந்த வினாத்தாட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள சார் நிலை கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருவூலங்களில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக