கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 10 ஜூலை, 2012

மீண்டும் களை கட்டிய குற்றால சீசன் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

குற்றாலத்தில் மீண்டும் சீசன் களை கட்டியதால் நேற்று மாலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. "ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் சாரல் மழை பொழிந்து சீசன் துவங்கினாலும் தொடர்ந்து சாரல் மழை பொய்த்ததால் சீசன் டல் அடித்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி சாரல் மழையின் ஆதிக்கம் மிகுந்ததால் சீசன் களை கட்டியது. பின்னர் மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.
இந்நிலையில் நேற்று மாலையில் பொதிகை மலையை மழை மேக கூட்டங்கள் சூழ்ந்தது. ஜில் என தென்றல் காற்று வீசவே சாரல் மழை பொழிந்தது. மலைப்பகுதியில் மழையின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் இரவு மெயின் அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவியிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.
அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததாலும், குளு குளு நிலைமை ஏற்பட்டு சீசன் மீண்டும் களை கட்டியதாலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். இரவு சாரல் மழையுடன் குளிர்ந்த காற்று வீசியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக