கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 14 ஜூலை, 2012

கடையநல்லூரில் நோய் பரவ அதிகாரிகளே காரணம் நகராட்சி தலைவி புகார்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல், காலரா பரவியதற்கு அதிகாரிகளே காரணம் என நகராட்சி தலைவி சைபுன்னிஷா புகார் தெரிவித்துள்ளார். 
 இதுதொடர்பாக அவர் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த 4 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி மக்களை வாட்டி வதைத்தது. காய்ச்சலுக்கு 11 பேர் பலி யான நிலையில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 
காய்ச்சலை தொடர்ந்து தற்போது பொதுமக்கள் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நோய்களை கட்டுபடுத்த நகராட்சி நிர்வாகம் முழு முயற்சி மேற்கொண்ட போதிலும் நகராட்சி உணவு அலு வலர் உள்பட பல அலுவலர்கள் முறையாக பணியாற்ற முன் வர வில்லை. 
துப்புரவு பணியாளர்கள்  குறைந்த அளவே இருப்பதால் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 11 வார்டுகளின் பணிகள் தனியார் மூலம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. 
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடம் அனுமதி கேட்டு வாங்காததால் தற்போது 11 வார்டுகளில் தனியார் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. 
இதனால் சுமார் 85 துப்புரவு பணியாளர்களை வைத்து 33 வார்டுகளிலும் துப்புரவு பணி மேற் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. 
எனவே கடையநல்லூர் பகுதியில் தொற்று நோய் கட்டுபடுத்தப்பட்ட நிலையிலும்  மீண்டும் நோய் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி நகராட்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக