கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 25 ஜூலை, 2012

கடையநல்லூர் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

கடையநல்லூர் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

விழாவிற்கு கடையநல்லூர் கிளாசிக் பிரஸ் உரிமையாளர் கலந்தர் மஸ்தான் தலைமை வகித்தார். தென்மாவட்ட சினிமா லொக்கேஷன் மேலாளர் சொக்கம்பட்டி சரவணக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிங் யுனிவர்ஸ் பள்ளி தாளாளர் ராஜாமுத்துக்குமார் வரவேற்று, இயற்கை வளம் குறித்தும், பசுமை வளம் குறித்தும் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் முத்துகிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக