கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 4 ஜூலை, 2012

சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மை சமுதாயங்களை சேர்ந்த மாணவியருக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்க இருப்பதாகவும், தகுதியுள்ள மாணவியர் அதனை பயன்படுத்தக்கொள்ளலாம் என்றும் ராமநாதபுரம் கலெக்டர் கூறியுள்ளார்.   கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்மையால் கல்வியை தொடர முடியாமல் இருக்கும் இஸ்லாமியர், சிறிஸ்தவர். சீக்கியர,; பார்சி, மற்றும் புத்த மதத்தை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வியை தொடர வசதியாக மத்திய அரசு மெளலானா ஆசாத் கல்வி உதவித்தொகை திட்டத்தை எற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி 11 ம் வகுப்பு மாணவிகளுக்கு வருடத்துக்கு ரூ 12 ஆயிரம் இருதவணைகளாக வழங்கப்படுகிறது. கல்விக்கட்டணம். பாடபுத்தகம், உண்டி மற்றும் உறையுள் செலவுக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தன்படி நிதியுதவி பெற குறைந்த பட்சம் 10 ம் வகுப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய மாணவிகள் தங்கள் உரிய சான்றுகளுடன் விண்ண்பபிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக