கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 14 ஜூலை, 2012

கடையநல்லூர் பாப்பான்கால்வாயில் பாதுகாப்புடன் ஆக்ரமிப்புகள் அகற்றம்

கடையநல்லூர் பாப்பான்கால்வாயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடையநல்லூர் கருப்பாநதி அணைக்குட்பட்ட பாப்பான்கால்வாயில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் அமைந்திருப்பதாகவும், இதனால் கடைமடை வரை பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு தண்ணீர் சீராக செல்லாமல் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. பருவமழை கொட்டி தீர்த்தாலும் இதே நிலைதான் பல ஆண்டுகளாக தொடர்வாக குளத்துபாசன விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இதனிடையில் பாப்பான்கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. இதனால் இப்பணி கைவிடப்பட்டது. இதனிடையில் பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த 26ம் தேதி கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவி பொறியாளர் மணிகண்டன் மூலம் நோட்டீஸ் அனுப்பபட்டது. இதனிடையில் நேற்று காலை பாப்பான்கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தென்காசி தாசில்தார் தேவபிரான், புளியங்குடி டிஎஸ்பி., ஜமீம் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள், 20க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், 30 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பாதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை கிழக்கில் இருந்து மேற்காகவும், ரகுமானியாபுரத்தில் இருந்து கிழக்கு நோக்கியும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பொதுமக்கள் ஆங்காங்கே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி எப்படி கிடைக்கிறது : பாப்பான் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது பொதுமக்கள் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ""கால்வாயில் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. அப்படி என்றால் வீடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் எப்படி தருகிறார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக இப்பகுதியில் சில கட்டடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் பிளான் அப்ரூவலும், குடிநீர் இணைப்பும் வழங்கியுள்ளது அப்படி என்றால் நகராட்சி நிர்வாகம்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்'' என் பொதுமக்கள் புலம்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக