கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 8 ஜூலை, 2012

கடையநல்லூரில் அமைச்சர் ஆலோசனை

கடையநல்லூரில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடையநல்லூரில் நேற்று நடப்பாண்டிற்கான தொகுதி எம்எல்ஏ நிதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் படியே நடப்பாண்டும் ரேஷன் கடைகள், பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட கட்டட பணிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அதிமுகவினர் தரப்பில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் கடந்த நிதியாண்டில் எம்எல்ஏ ஒதுக்கீட்டில் 100 சதவீதம் கட்டட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து செந்தூர்பாண்டியன் கூறுகையில், ""கடையநல்லூர் தொகுதியில் எம்எல்ஏ நிதி ஒதுக்கீட்டில் நடப்பாண்டில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக