கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் துரைச்சாமிபுரத்தில் சீவலப்பேரி குளம் உள்ளது. இந்த குளத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளப்பட்டு வருகிறது. குளத்தில் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
எனவே குளத்தில் மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் இன்று காலை சீவலப்பேரி குளத்திற்கு மண் அள்ள வந்த லாரிகளை அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் சிறை பிடித்தனர்.
மேலும் மதுரை-தென்காசி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே மண் அள்ளும் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி இடைகால் அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் செல்லப்பாவை சிலர் சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக