கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 25 ஜூலை, 2012

கடையநல்லூரில் காங்.,கொண்டாட்டம்

ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டதை காங்., கட்சியினர் கடையநல்லூரில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றதையடுத்து கடையநல்லூரில் காங்., கட்சி சார்பில் பள்ளிவாசல் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ராகுல் நற்பணி மன்ற தென்மண்டல பொறுப்பாளர் கணேசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகவேல், முன்னாள் நகர காங்.,தலைவர்கள் பெரியசாமி, சங்கரன், ராகுல் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் குமாரசாமிபாண்டியன், நகர காங்., செயலாளர்கள் ரவி, பட்டு மற்றும் கருப்பசாமி, இஸ்மாயில், மைதீன்பிச்சை, லத்தீப், ரத்தினம் ஆசாரி, சிவபெருமாள், சுப்பையாபாண்டியன், தங்கராஜ், மக்தூம் உட்பட காங்., கட்சியினர் கலந்து கொண்டனர்.

* ஆய்க்குடியில் இளைஞர் காங்.,தலைவர் கார்வின் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கிராம காங்.,கமிட்டி தலைவர் தாசன், முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, இளைஞர் காங்., செயலாளர் சாலமன் அந்தோணி, சந்தியாகப்பன் மற்றும் காங்., கட்சியினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக