கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 17 ஜூலை, 2012

சென்னை பரங்கிமலை தர்காவிற்கு ஏ.ஆர்.ரகுமான் தனது தலையில் சந்தன குடத்தை சுமந்து ஊர்வலத்துடன் சென்றார்.





சென்னை பரங்கிமலை ராணுவ பகுதியில் ஹசரத் சையத் ஷா அலி மஸ்தான் ஷமன் ஷா அலி தர்கா உள்ளது. இந்த தர்காவில் 128ம் ஆண்டு சந்தன முபாரக் உரூஸ் திருவிழா நடைபெற்றது.
கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நேற்று முன்தினம் மாலை சந்தன குடம் ஊர்வலம் நடைபெற்றது.

ஆலந்தூரில் உள்ள முக்கிய வீதிகளில் இந்த சந்தன குடம் ஊர்வலமாக சென்று வந்தது. சந்தன குடம் ஊர்வலம் தர்காவிற்கு வந்ததும் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது தலையில் சந்தன குடத்தை சுமந்து ஊர்வலத்துடன் சென்றார்.

அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக