கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 30 ஜூன், 2012

கடையநல்லூர் - செங்கோட்டை இன்று புதிய பஸ் இயக்கம்

செங்கோட்டையிலிருந்து கடையநல்லூருக்கு புதிய வழித்தடத்தில் இன்று (30ம் தேதி) டவுன் பஸ்சினை அமைச்சர் செந்தூர்பாண்டியன் இயக்கி வைக்கிறார்.செங்கோட்டையிலிருந்து தேன்பொத்தை, பண்பொழி, கணக்கப்பிள்ளைவலசை, அச்சன்புதூர் வழியாக கடையநல்லூருக்கு டவுன் பஸ் வசதி செய்துதர வேண்டுமென வழியோர கிராம பொதுமக்களும், அதிமுகவினரும் அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் வலியுறுத்தி வந்தனர். 

இதனை தொடர்ந்து செங்கோட்டையிலிருந்து தேன்பொத்தை, கணக்கப்பிள்ளைவலசை, நெடுவயல், அச்சன்புதூர், காசிதர்மம் வழியாக கடையநல்லூருக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்குவதற்கான அனுமதி அமைச்சர் செந்தூர்பாண்டியன் பரிந்துரையின்படி வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து புதிய டவுன் பஸ்சினை செங்கோட்டை பஸ்ஸ்டாண்டிலிருந்து இன்று (30ம் தேதி) காலை 10.35 மணிக்கு அமைச்சர் செந்தூர்பாண்டியன் இயக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர்கள் கிட்டுராஜா, தங்கவேலு, தொகுதி இணை செயலாளர்கள் பி.வி.நடராஜன், எல்ஐசி முருகையா, செங்கோட்டை நகராட்சி சேர்மன் வக்கீல் மோகனகிருஷ்ணன், மாவட்ட பேரவை செயலாளர் வடகரை ரஜப் முகம்மது, கவுன்சிலர் கிருஷ்ணமுரளி உட்பட அதிமுகவினர் கலந்து கொள்கின்றனர்.பஸ் இயக்குவதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக