பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி. பெட்டியில் எலிகளின்
அட்டகாசத்தை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி,
வாசுதேவநல்லூர், பாவூர்சத்திரம், கடையம் உட்பட பல்வேறு சுற்று வட்டார கிராம
மக்களின் வசதிக்காக செங்கோட்டை- சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்
இயக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில்,
ராஜபாளையம், சிவகாசி, மதுரை, திருச்சி வழியாக சென்னை செல்கிறது. இதேபோல்
சென்னையிலிருந்து செங்கோட்டை வருகிறது.ரயில்களில் உள்ள ஏசி., பெட்டியில்
எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளது என புகார் தெரிவிக்கப்பட்டு வரும்
நிலையில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இதே நிலை நீடிப்பதாக பயணிகள் புகார்
தெரிவித்துள்ளனர்.ஏசி., பெட்டியில் எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த ரயில்வே
நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள்
வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக