கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 22 ஜூன், 2012

333 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணி ஜூலை 20ம் தேதிக்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

 நெல்லை மாவட்டத்தில் 333 அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் வரும் ஜூலை மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் 19 வட்டாரங்கள், நெல்லை மாநகரட்சி, சங்கரன்கோவில் நகராட்சி ஆகியவற்றில் 193 அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள், 140 உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற 1.6.2012 அன்று 25-35 வயதுக்கும், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள் 40 வயதுக்கும் உட்பட்டவராகவும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுத படிக்க தெரிந்த, 20-40 வயதுக்கும், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள் 45 வயதுக்கும் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பவர்கள் காலியிடத்திற்கு உட்பட்ட பகுதி அல்லது அதனை சுற்றி 10 கி.மீ தூரத்திற்குள் வசிப்பவராகவும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்கள் அதே வார்டை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.அங்கன்வாடி பணியாளருக்கு விண்ணப்பத்துடன் ரேஷன் கார்டு, வயது, இருப்பிடம், கல்வித் தகுதி சான்று, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்று, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, சாதி சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு ரேஷன் கார்டு, வயது, இருப்பிட சான்று, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்று, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, சாதி சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

உள்ளூர் மற்றும் அதே பஞ்., பகுதியை சேர்ந்த தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் போட்டோ ஒட்டி அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து வரும் ஜூலை மாதம் 20ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக