கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 30 ஜூன், 2012

கடையநல்லூர் கோட்டத்தில் மின்தடை சுழற்சி நேரம் அறிவிப்பு

கடையநல்லூர் மின்கோட்டத்தில் மின்தடை சுழற்சி நேரம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மின்கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் கூறியிருப்பதாவது:-""கடையநல்லூர் மின்கோட்டத்திற்குட்பட்ட வீரசிகாமணி, கடையநல்லூர், புளியங்குடி, நாரணபுரம் மற்றும் விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையங்களிலில் வரும் 1ம் தேதி முதல் மின்தடை சுழற்சி நேரம் மாற்றப்படுகிறது.

இதன்படி கடையநல்லூர் துணை மின்நிலையத்தில் உள்ள டவுன் 1 மற்றும் 2 பீடர்களில் மதியம் 12-3, ரூரல், நயினாரகரம், மில் பீடர்களில் காலை 9-12, கம்பனேரி பீடரில் மதியம் 12-3, புளியங்குடி துணைமின் நிலையத்தில் டவுன் பீடரில் காலை 9-12, சொக்கம்பட்டி பீடரில் மாலை 3-6, வீரசிகாமணி துணை மின் நிலையத்தில் சேர்ந்தமரம் பீடரில் மாலை 3-6, ஊத்தான்குளம் பீடரில் காலை 9-12, வலசை பீடரில் மாலை 12-3, நாரணபுரம் துணை மின்நிலையத்தில் சிந்தாமணி பீடரில் மதியம் 12-3, நெல்கட்டும்செவல் பீடரில் காலை 6-9, ராயகிரி பீடரில் காலை 9-12, விஸ்வநாதப்பேரி உபமின் நிலையதில் உள்ள சிவகிரி, வழிவழிகுளம், விஸ்வநாதப்பேரி ஆகிய பீடர்களில் காலை 6-9, தேவிபட்டணம் பீடரில் காலை 9-12 ஆகிய நேரங்களில் மின்தடை சுழற்சி நேரம் இருக்கும்'' என மின்கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக