கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 30 ஜூன், 2012

கடையநல்லூர் அருகே பைக் மீது ஜீப் மோதி விபத்து: தனியார் நிதிநிறுவன மேலாளர் பலி



கடையநல்லூர் கரிய மாணிக்க பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது30). இவர் சேர்ந்தமரம் அருகே வீரசிகாமணியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வந்தார். தினமும் தனது ஊரில் இருந்து வீரசிகாமணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துசெல்வார். அதேபோல் இன்றுகாலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
 
கடையநல்லூர்-சேர்ந்தமரம் ரோட்டில் கண்மணியாபுரம் பகுதியில் வந்தபோது, அவ்வழியாக எதிரேவந்த ஒரு ஜீப், சங்கரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட சங்கர் பலத்த காயமடைந்தார். அவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
 
இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற சங்கரை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சங்கர் அனுப்பி வைக்கப்பட்டார்.
இங்கு அனுமதிக்கப்பட்ட சிறிதுநேரத்திலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். இந்தவிபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, விபத்துக்கு காரணமான ஜீப்பை தேடிவருகிறார்கள். விபத்தில் பலியான சங்கருக்கு சவுமியா(23) என்ற மனைவியும், 1 வயதில் சாய்கணேஷ் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளசவுமியா, பிரசவத்திற்காக மதுரையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கடையநல்லூர் - செங்கோட்டை இன்று புதிய பஸ் இயக்கம்

செங்கோட்டையிலிருந்து கடையநல்லூருக்கு புதிய வழித்தடத்தில் இன்று (30ம் தேதி) டவுன் பஸ்சினை அமைச்சர் செந்தூர்பாண்டியன் இயக்கி வைக்கிறார்.செங்கோட்டையிலிருந்து தேன்பொத்தை, பண்பொழி, கணக்கப்பிள்ளைவலசை, அச்சன்புதூர் வழியாக கடையநல்லூருக்கு டவுன் பஸ் வசதி செய்துதர வேண்டுமென வழியோர கிராம பொதுமக்களும், அதிமுகவினரும் அமைச்சர் செந்தூர்பாண்டியனிடம் வலியுறுத்தி வந்தனர். 

இதனை தொடர்ந்து செங்கோட்டையிலிருந்து தேன்பொத்தை, கணக்கப்பிள்ளைவலசை, நெடுவயல், அச்சன்புதூர், காசிதர்மம் வழியாக கடையநல்லூருக்கு புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்குவதற்கான அனுமதி அமைச்சர் செந்தூர்பாண்டியன் பரிந்துரையின்படி வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து புதிய டவுன் பஸ்சினை செங்கோட்டை பஸ்ஸ்டாண்டிலிருந்து இன்று (30ம் தேதி) காலை 10.35 மணிக்கு அமைச்சர் செந்தூர்பாண்டியன் இயக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர்கள் கிட்டுராஜா, தங்கவேலு, தொகுதி இணை செயலாளர்கள் பி.வி.நடராஜன், எல்ஐசி முருகையா, செங்கோட்டை நகராட்சி சேர்மன் வக்கீல் மோகனகிருஷ்ணன், மாவட்ட பேரவை செயலாளர் வடகரை ரஜப் முகம்மது, கவுன்சிலர் கிருஷ்ணமுரளி உட்பட அதிமுகவினர் கலந்து கொள்கின்றனர்.பஸ் இயக்குவதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடையநல்லூர் கோட்டத்தில் மின்தடை சுழற்சி நேரம் அறிவிப்பு

கடையநல்லூர் மின்கோட்டத்தில் மின்தடை சுழற்சி நேரம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மின்கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் கூறியிருப்பதாவது:-""கடையநல்லூர் மின்கோட்டத்திற்குட்பட்ட வீரசிகாமணி, கடையநல்லூர், புளியங்குடி, நாரணபுரம் மற்றும் விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையங்களிலில் வரும் 1ம் தேதி முதல் மின்தடை சுழற்சி நேரம் மாற்றப்படுகிறது.

இதன்படி கடையநல்லூர் துணை மின்நிலையத்தில் உள்ள டவுன் 1 மற்றும் 2 பீடர்களில் மதியம் 12-3, ரூரல், நயினாரகரம், மில் பீடர்களில் காலை 9-12, கம்பனேரி பீடரில் மதியம் 12-3, புளியங்குடி துணைமின் நிலையத்தில் டவுன் பீடரில் காலை 9-12, சொக்கம்பட்டி பீடரில் மாலை 3-6, வீரசிகாமணி துணை மின் நிலையத்தில் சேர்ந்தமரம் பீடரில் மாலை 3-6, ஊத்தான்குளம் பீடரில் காலை 9-12, வலசை பீடரில் மாலை 12-3, நாரணபுரம் துணை மின்நிலையத்தில் சிந்தாமணி பீடரில் மதியம் 12-3, நெல்கட்டும்செவல் பீடரில் காலை 6-9, ராயகிரி பீடரில் காலை 9-12, விஸ்வநாதப்பேரி உபமின் நிலையதில் உள்ள சிவகிரி, வழிவழிகுளம், விஸ்வநாதப்பேரி ஆகிய பீடர்களில் காலை 6-9, தேவிபட்டணம் பீடரில் காலை 9-12 ஆகிய நேரங்களில் மின்தடை சுழற்சி நேரம் இருக்கும்'' என மின்கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 29 ஜூன், 2012

சுல்தான் ஷாப்பிங் (லேடீஸ் கார்னர்ஸ்)

நல்லூர் நகரில் புதிய உதயம் 

பெண்களுக்கான பிரத்யோக ஷோரூம் 

சுல்தான் குருப் -ன் மூன்றாம் ஷோருமாக
சுல்தான் ஷாப்பிங் (லேடீஸ் கார்னர்ஸ்)
துவக்க விழா இறைவன் கிருபையால் 25-06-2012 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது விழாவை குறிச்சிகுளம் ஊராட்சி மன்றத் தலைவி ஜனாபா மெஹர் பானு தலைமை தாங்கி திறந்து வைத்தார் அருகில் (12-வது வார்டு ) Mc . R.சுலைஹாள் ரகுமத்துல்லாஹ் (இடது புறம் ) மற்றும் ஜனாபா முஹைதீன் பாத்திமா   (15-வது வார்டு ) Mc (வலது புறம்) அவர்களும் உள்ளனர்.





With Best Wishes 
Sulthan Mobile Show Room
Suthan DTH Show Room
(Staff & Friends)

மேலும் பல நன்மைகள் பெற துவாவுடன் வாழ்த்தும் 
Bharath Communication


ஹஜ் புனித யாத்திரை செல்ல தமிழகத்தில் இருந்து 2,863 பேருக்கு அனுமதி: அமைச்சர் முகமது ஜான் தகவல்

ஹஜ் புனித யாத்திரை செல்ல தமிழகத்திலிருந்து 2,863 இஸ்லாமிய பெருமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சர் முகமது ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஹஜ் யாத்திரை செல்ல உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு முதன் முதலாக புத்தறிவு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இந்தாண்டு தமிழகத்திலிருந்து 12,110 பேர் விண்ணப்பத்திருந்தனர். அதில் 2,683 பேருக்கு ஹஜ் யாத்திரை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் வேலூர் மாவட்டத்திலிருந்து 374 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து 43 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல அதிக அளவில் விண்ணப்பித்து இருந்தும், குறைந்த அளவில் தான் அனுமதி கிடைத்துள்ளது. விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் யாத்திரை செல்ல முதல்வர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்றார்.

வியாழன், 28 ஜூன், 2012

நெல்லை-தென்காசி இடையே மூன்றாண்டுகளுக்கு பிறகு வரும் 5ம் தேதி ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம்


நெல்லை-தென்காசி இடையே மூன்றாண்டுகளுக்கு பிறகு வரும் 5ம் தேதி ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நெல்லை-தென்காசி இடையே 72 கிமீ தூரம் மீ்ட்டர்ஜேக் தண்டவாளத்தை கடந்த 2009ம் ஆண்டில் அகல பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. ஆமை வேகத்தில் நடந்த பணிகளால் மூன்றாடுகளாக இந்த வழித்தடத்தில் ரயில் சேவை இல்லை. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். ஒரு வழியாக பணிகளை நிறைவு செய்த ரயில்வே அதிகாரிகள் கடந்த ஏப்ரலில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி மிட்டல் தலைமையில் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர். ரயிலை 70கிமீ வேகத்தில் ஓட்டிச் செல்ல மி்ட்டல் பச்சை கொடி காட்டினார்.
ஆனால் பெட்டிகள் பற்றாக்குறையால் பயணிகள் ரயில் சேவையை தொடங்க முடியவில்லை. இந்நிலையில் ரயில் சேவை தொடங்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். கோடை சிறப்பு ரயில் சேவை முடிந்தவுடன் அதிலுள்ள பெட்டிகளை கொண்டு தென்காசி ரயிலை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது ஜூலை மாதம் 5ம் தேதி நெல்லை-தென்காசி இடையே ரயில் சேவையை தொடங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

புதன், 27 ஜூன், 2012

சவுதியின் அல் நாதா கம்பெனியில் வேலை வாய்ப்பு

சவுதியின் அல் நாதா கம்பெனியில் வேலை வாய்ப்பு


கடையநல்லூரில் குடும்பத் தகராறில் தாய்-தந்தையை மகனே கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடையநல்லூரில் குடும்பத் தகராறில் தாய்-தந்தையை மகனே கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் மாவடிக்கால் ரயில்வே பீடர் ரோட்டைச் சேர்ந்தவர் தர்மர் என்ற முத்துசாமி. இவர் தவணை முறையில் வீடு, வீடாகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி அய்யம்மாள். இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகளும், சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர். மணிகண்டனுக்கு திருமணமாகி பெற்றோர் வசிக்கும் வீட்டின் மாடியில் குடியிருந்து வருகிறார். கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த சண்முகத்தாய் தனது மகனுடன் பாளையங்கோட்டையில் வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். இது மணிகண்டனுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சண்முகத்தாய் அடிக்கடி தனது பெற்றோரை தொடர்பு கொண்டு பேசி வந்தார். மேலும் மாவடிக்காலில் குடியேறவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் தர்மரும், அய்யம்மாளும் பாளையங்கோட்டையில் உள்ள சண்முகத்தாய் வீட்டுக்கு சென்று பேரனை அழைத்துக் கொண்டு மாவடிக்கால் வந்தனர். இது மணிகண்டனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தங்கை மகனை அழைத்து வந்தது குறித்து அவர் பெற்றோருடன் நேற்று இரவு கடும் வாக்குவாதம் செய்தார். திடீரென அவர் அரிவாளால் பெற்றோரை சரமாரியாக வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தனர். பின்னர் மணிகண்டன் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்த இரட்டை கொலை குறித்து அப்பகுதி மக்கள் கடையநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடல்களைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான மணிகண்டனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 25 ஜூன், 2012

ஜூலை 13ல் பில்லா 2 ரிலீஸ்?


அஜீத் குமாரின் பில்லா 2 படம் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ள பில்லா 2 படம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. சென்சாருக்கு போன இடத்தில் பல இடங்களில் கை வைக்கப்பட்டது. மேலும் 'ஏ' சான்றிதழ் கிடைத்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போகிறது. ஜூன் 22ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் கார்த்தியின் சகுனி அதே நாளி்ல் ரிலீஸானதால் படத்தின் வியாபாரத்தை கணக்கில் கொண்டு ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூன் 29ம் தேதியும் படம் ரிலீஸ் இல்லையாம். மாறாக வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமையன்று படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.
ஜூலை 13லாவது ரிலீஸ் செய்துவிடுவார்களா என்று அஜீத் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.
இதற்கிடையே விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத பட ஷூட்டிங் பெங்களூரில் நடந்தது. இதில் அஜீத் குமார் கலந்து கொண்டார். இந்த செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்துவிட்டார்களாம். அவர்களை கட்டுப்படுத்துவதற்குள் போலீசாருக்கு போதும், போதும் என்றாகிவிட்டதாம்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

வெள்ளி, 22 ஜூன், 2012

333 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணி ஜூலை 20ம் தேதிக்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

 நெல்லை மாவட்டத்தில் 333 அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் வரும் ஜூலை மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் 19 வட்டாரங்கள், நெல்லை மாநகரட்சி, சங்கரன்கோவில் நகராட்சி ஆகியவற்றில் 193 அங்கன்வாடி மையங்களில் பணியாளர்கள், 140 உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற 1.6.2012 அன்று 25-35 வயதுக்கும், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள் 40 வயதுக்கும் உட்பட்டவராகவும், அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுத படிக்க தெரிந்த, 20-40 வயதுக்கும், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள் 45 வயதுக்கும் உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பவர்கள் காலியிடத்திற்கு உட்பட்ட பகுதி அல்லது அதனை சுற்றி 10 கி.மீ தூரத்திற்குள் வசிப்பவராகவும், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்கள் அதே வார்டை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.அங்கன்வாடி பணியாளருக்கு விண்ணப்பத்துடன் ரேஷன் கார்டு, வயது, இருப்பிடம், கல்வித் தகுதி சான்று, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்று, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, சாதி சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு ரேஷன் கார்டு, வயது, இருப்பிட சான்று, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்று, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, சாதி சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

உள்ளூர் மற்றும் அதே பஞ்., பகுதியை சேர்ந்த தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் போட்டோ ஒட்டி அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து வரும் ஜூலை மாதம் 20ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.

வியாழன், 21 ஜூன், 2012

கடையநல்லூரில் அங்கன்வாடி ஊழியரை காரில் கடத்த முயன்ற கும்பல் பத்திரிகை செய்தி

கடையநல்லூரில் அங்கன்வாடி ஊழியரை காரில் கடத்த முயன்ற கும்பல் பத்திரிகை செய்தி
பொது மக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்

கடையநல்லூரில் டெங்குவை தொடர்ந்து வாந்தி-பேதி: 2 பெண்கள் பலியானதால் பொதுமக்கள் அச்சம்

கடையநல்லூரில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் பரவியது. அதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்காததால் கடையநல்லூர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் மட்டுமின்றி நெல்லை மாவட்டம் முழுவதும் வேகமாக பரவியது.
 
அதன்பிறகு மாநில சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டது. இருந்தபோதிலும் அண்டை மாவட்டமான தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்திற்கும் டெங்கு காய்ச்சல் பரவியது.
 
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். ஆனால் முதலில் பரவிய நெல்லை மாவட்டத்தில்தான் டெங்கு காய்ச்சல் காரணமாக அதிக உயிரிழப்பு ஏற்பட்டது.
 
தற்போது டெங்கு பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறையின் தொடர் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு ஏற்பட்டதே இதற்கு காரணம்.
 
மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி டெங்கு பரவத்தொடங்கிய கடைய நல்லூரிலும் பாதிப்பு வெகுவாக குறைந்தது. இந்நிலையில் கடையநல்லூர் பகுதியில் தற்போது வாந்தி-பேதி பரவத்தொடங்கியுள்ளது.
 
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தார்கள். அவர்களில் சொக்கம்பட்டி வலையர்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராக்கிமுத்து என்பவரின் மனைவி மாடத்தி (வயது50), ராக்கம்மாள் (80) ஆகிய இருவரும், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 
பின்பு அங்கிருந்து கடைய நல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவர்கள், மேல்சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
 
வாந்தி-பேதிக்கு 2 பெண்கள் பலியான சம்பவத்தால் கடையநல்லூர் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பீதி சற்று அடங்கிய நிலையில் தற்போது வாந்தி-பேதி பாதித்து வருவதாலும், அதற்கு 2 பெண்கள் பலியானதாலும் இந்த பீதி ஏற்பட்டுள்ளது.
 
குடிநீர் பல இடங்களில் மாசுபடுவதாலும், அந்த சுகாதாரமற்ற குடிநீர் வினியோகமே வாந்தி-பேதிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆகையால் சுகாதாரமான சுத்தமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடையநல்லூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் இலங்கை அகதிகள் 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடையநல்லூர் அருகே தாயார்மடத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தீபிகா (வயது4), முரளிதரன் (6), செல்லையா (45), ருதினா, சாத்தையா (37) உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
 
இதனைத்தொடர்ந்து இலங்கை அகதிகள் முகாமில் கொசு மருந்து அடிப்பு உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் எலிகள் தொல்லை : எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த பயணிகள் கோரிக்கை

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி. பெட்டியில் எலிகளின் அட்டகாசத்தை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், பாவூர்சத்திரம், கடையம் உட்பட பல்வேறு சுற்று வட்டார கிராம மக்களின் வசதிக்காக செங்கோட்டை- சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, மதுரை, திருச்சி வழியாக சென்னை செல்கிறது. இதேபோல் சென்னையிலிருந்து செங்கோட்டை வருகிறது.ரயில்களில் உள்ள ஏசி., பெட்டியில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளது என புகார் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இதே நிலை நீடிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.ஏசி., பெட்டியில் எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கடையநல்லூரில் குடிநீர் வழங்கும் திட்டம் : உறைகிணறுகள் அமைக்க ரூ.1 கோடி அனுமதி

சொக்கம்பட்டி, திரிகூடபுரம் பஞ்., பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினமும் வழங்கிடும் வகையில் தனித்தனி கிணறுகள் அமைத்திட ஒரு கோடி ரூபாய் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.கடையநல்லூர் யூனியன் சொக்கம்பட்டி, திரிகூடபுரம் ஆகிய இரண்டு பஞ்., பகுதி மக்களுக்கு கருப்பாநதி அணை அருகிலுள்ள ஆற்றுப்படுகையில் உறை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கிணற்றில் இருந்து ஒருநாள் சொக்கம்பட்டி பஞ்.,சிற்கும், மறுநாள் திரிகூடபுரம் பஞ்.,சிற்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையில் இரண்டு பஞ்.,களின் மக்கள் தொகையினை கருத்திற்கொண்டு தற்போது தினமும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஒரு கோடி ரூபாய் செலவில் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறுகையில், ""கடையநல்லூர் யூனியன் சொக்கம்பட்டி, திரிகூடபுரம் பஞ்., பகுதி மக்களின் தினசரி குடிநீர் தேவையை நிறைவேற்றிடும் வகையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திற்கான திட்டம் செயல்படுத்தப்படுமென தேர்தல் நேரத்தில் அதிமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி சொக்கம்பட்டி, திரிகூடபுரம் ஆகிய இரண்டு பஞ்.,களுக்கும் கருப்பாநதி ஆற்றுப்படுகையில் தனித்தனியாக இரண்டு கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் வகையில் தனி பைப்லைன்கள் அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் சொக்கம்பட்டி பஞ்.,சில் சுமார் 49லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், திரிகூடபுரம் பஞ்.,சில் சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
புதிய உறைகிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் செந்தூர் பாண்டியனுக்கு தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, சொக்கம்பட்டி பஞ்., தலைவர் பூபதி சந்தனபாண்டியன், திரிகூடபுரம் பஞ்., தலைவர் முத்துசெல்வி மற்றும் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தனது காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி!

17 லட்ச ரூபாய் கையிலிருந்தால் என்ன செய்வீர்கள். ஒரு பிரிமியம் கார், டுகாட்டி பைக் அல்லது அருமையான சிங்கிள் பெட்ரூம் வீடு வாங்கிவிடலாம் அல்லவா. ஆனால், பஞ்சாபை சேர்ந்த விவசாயி கம் தொழிலதிபர் ஒருவர் புதிதாக வாங்கிய தனது காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கியுள்ளார்.பஞ்சாப் மாநிலம், மொகாலியை சேர்ந்தவர் ஜெகஜித் சிங் சகல்(40). இவருக்கு ஒன்றாம் எண் என்றால் மிகவும் ராசியாம். இதனால், இவரது வீட்டு நம்பர் முதல் மொபைல் நம்பர் வரை அனைத்தும் ஒன்றில் தான் முடியும். இதே வரிசையில், சமீபத்தில் 98 லட்ச ரூபாயில் வாங்கிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார்.
farmer splurges rs 17 lakh on car registration number

சண்டிகரில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் சிஎச்01 ஏஎன் 0001(CH 01 AN 0001) என்ற பேன்ஸி நம்பரை 17 லட்ச ரூபாயக்கு வாங்கியுள்ளார் ஜெகஜித். ஏலத்தில் இந்த பேன்ஸி நம்பருக்கு அடிப்படை விலையே ரூ.25,000ம் தான். ஆனால், ஏலத்தில் கடும் போட்டி இருந்தால் பெரும் தொகையை கொடுத்து இந்த எண்ணை ஜெகஜித் வாங்கியுள்ளார்.
பெரும் தொகை கொடுத்தது பற்றி தான் சிறிதும் கவலைப்படவில்லை என்று கூறியுள்ள ஜெகஜித் கடும் போட்டியிலும் ராசியான நம்பர் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த பேன்ஸி நம்பருக்காக 20 லட்சம் வரை தருவதற்கு தயாராக இருந்ததாக தெரிவித்து மேலும் ஒரு ஷாக் கொடுத்தார் ஜெகஜித்.
ஜெகஜித் சிங் சகலிடம் மொத்தம் 8 கார்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் 0001 என்று முடியும் பதிவு எண்ணை அவர் வாங்கியுள்ளார். கடந்த 1992ம் ஆண்டு முதன்முறையாக வாங்கிய மாருதி 800 காருக்கு பிபி10 கே 0001 என்ற பதிவு எண்ணை பெற்றுள்ளார். ஆனால், அப்போது ஏல நடைமுறைகள் இல்லாததால் எளிதாக வாங்க முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
விவசாயமும், சண்டிகரில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையும் நடத்தி வரும் ஜெகஜித் சிங்கின் தந்தை டாக்டராக பணிபுரிந்து வருகிறார். ஜெகஜித் சிங் மட்டுமல்ல அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கார்கள் மற்றும் பைக்குகளும் 1 என்ற பதிவு எண்ணை கொண்டுள்ளன.

ஞாயிறு, 17 ஜூன், 2012

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர்.ஜூன் 1ம் தேதி முதல் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த 5ம் தேதி கேரள வனப்பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்ததின் அடிப்படையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழத் துவங்கியது. இதனால் சீசன் துவங்கியதாக சுற்றுலா பயணிகளும் குற்றாலம் வரத் துவங்கினர். விவசாயிகளும், விவசாய பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வந்த வேளையில் கடந்த 10 நாட்களாக சாரல் மழை இன்றி காற்று மட்டுமே தீவிரமாக வீசி வந்தது. இதனால் குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கேரள வனப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மட்டுமின்றி செங்கோட்டை, குற்றாலம், தென்காசி போன்ற பகுதிகளில் சாரல்மழை பெய்து வந்ததின் அடிப்படையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் பரவலாகவும் தண்ணீர் விழுந்தது.அருவிகளில் தண்ணீர் விழும் செய்தி கேட்டு சுற்றுவட்டார பகுதிவாழ் மக்களும், சுற்றுலா பயணிகளும் கூட்டம், கூட்டமாக வந்து குளித்து மகிழ்ந்தனர். இப்பகுதியில் மழைமேகம் சூழ்ந்து தட்பவெப்ப நிலை மாறி இருண்டு காணப்படுவதால் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 15 ஜூன், 2012

சவுதியில் இறந்த தென்காசி வாலிபரின் உடலை கொண்டுவர உதவிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயலுக்கு மனைவி நன்றி

சவுதியில் இறந்த தென்காசி பாலமார்த்தாண்டபுரம் டிரைவரின் உடல் ஆறு மாதங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி அருகே பாலமார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ் (48). டிரைவர். இவரது மனைவி ஐயம்மாள் (40). இவர்களுக்கு பிரபாகரன் (18) என்ற மகனும், விஜயசாந்தி (16) என்ற மகளும் உள்ளனர். அல்போன்ஸ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் சொந்த ஊருக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கி விட்டு பின் மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

கடந்த 26.12.2011 அன்று அல்போன்ஸ் இறந்து விட்டார் என அவரது மனைவிக்கு போன் மூலம் செய்தி வந்துள்ளது. சிலர் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்றும், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளனர். அல்போன்ஸ் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனது மனைவியிடம் போனில் பேசும் போது, தன்னுடைய முதலாளி கொடுமை படுத்துவதாக கூறியுள்ளார்.

தனது கணவர் எதற்காக இறந்தார் என தெரியாத நிலையில் அவரது உடலை பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டுவர ஐயம்மாள் கலெக்டர் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் எம்.பி., காதர்முகைதீன் மூலம் மத்திய அரசு மற்றும் சவுதி அரேபியா தூதரக அதிகாரிகளிடம் பேசி அல்போன்ஸ் உடலை பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அல்போன்ஸ் உடல் சவுதி அரேபியாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அல்போன்ஸ் உடலை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட எம்.பி., காதர் முகைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷாவிற்கு ஐயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.



கடையநல்லூர் அருகே உயர்தர ஹாலிடே சிட்டி

கடையநல்லூர் அருகே உயர்தர ஹாலிடே சிட்டி 

கடையநல்லூர் அருகே சுரண்டை ரோட்டில் சுமார் 780 க்கும் மேற்பட்ட பிளாட்டுகள் ஸ்மார்ட் குழுமத்தினால் போடப்பட்டு தற்போது 300 க்கும் மேற்பட்ட பிளாட்டுகள் விற்பனையாகியுள்ளது உங்களின் கனவு வீடு மனையை இப்போதே முன்பதிவு செய்து கொள்ளுங்கள் 

ஸ்மார்ட் ஹாலிடே சிட்டியின் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா 17.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை விழா நடைபெறுவதால் இந்நிகழ்ச்சியில் இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 

அன்புடன் 

A அப்துல் காதர் 
மேலும் தொடர்புக்கு : 9942409600

அழைப்பிதழ் 

தமிழ்நாடு டிப்ளமோ தேர்வு முடிவுகள் இந்த http://www.tndte.org.in/results.html இணைய தளத்தில் காணலாம்

தமிழகத்தில் தற்போதுள்ள டிப்லோமோ தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன 

தமிழ்நாடு டிப்ளமோ தேர்வு முடிவுகள் இந்த http://www.tndte.org.in/results.html இணைய தளத்தில் காணலாம் 

Tamilnadu Directorate of Technical Education (TNDTE) is going to announce the TamilNadu Polytechnic results 2012 on today(15-06-2012) 3pm.

திங்கள், 11 ஜூன், 2012

முக்கியமான தமிழ் இ புத்தகங்கள்

கணிதமேதை ராமானுஜம் 

http://depositfiles.com/files/og7kjb8oh 


Dr.அப்துல்கலாம் 

http://depositfiles.com/files/ksdepwobc 


அனுவிஞ்ஞானி ராஜா ரமணன்
http://depositfiles.com/files/unjos5ka3
கெப்ளர்
http://depositfiles.com/files/yneoq7zuv

காரல்மார்க்ஸ்

http://depositfiles.com/files/s1y4av9dp


விவேகானத்தர் அமேரிக்காவில் ஆற்றிய உரை

http://depositfiles.com/files/7fa1ukjd0


தமிழக வரலாறு

http://depositfiles.com/files/riljxlkzh


லெனின் வரலாறு 

http://www.ziddu.com/download/17622741/14Lenin-Marxia-varalaaru.pdf.html

வந்தார்கள் வென்றார்கள் - வரலாற்றுத் தொடர்

http://www.ziddu.com/download/17624024/25Mathan-VanthaargalVentaargal.pdf.html

தந்தை பெரியார்  வாழ்க்கை வரலாறு

http://www.ziddu.com/download/17622746/1An-Autobiography-of-Periyar.pdf.html


பெண்ணின் பெருமை-வைகோ 

http://www.ziddu.com/download/17622772/19Vaiko-Pennin-Perumai.pdf.html


வரலாறு சந்தித்த வழக்குகள்-வைகோ 

http://www.ziddu.com/download/17622814/20.VARALAARUSANTHTHTHAVALUKKUKAL-VAIKO.pdf.html

தந்தை பெரியார் பொன்மொழிகள்

http://www.ziddu.com/download/17623079/23periyar-thoughtstamil.pdf.html

மதர் தெரசா வாழ்க்கை வரலாறு

http://www.ziddu.com/download/17623239/15Mother-Tresa.pdf.html

விவேகானந்தர் விவேக கதைகள்

http://www.ziddu.com/download/17623389/22Vivekanandar_Stories.pdf.html


காந்தி தரிசனம்

http://www.ziddu.com/download/17623409/7Gandhi-Tharisanam.pdf.html

ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு

http://www.ziddu.com/download/17623414/9Hitler.pdf.html

 காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறும்...

http://www.ziddu.com/download/17623444/8ghandi-congress.pdf.html

கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

http://www.ziddu.com/download/17623465/11Kamarajar-Life.pdf.html


போர்கேஸ்

http://www.ziddu.com/download/17623477/5borges.pdf.html


 கல்பனா சால்வா

http://www.ziddu.com/download/17623498/10Kalpana-chawla.pdf.html

ஞாயிறு, 10 ஜூன், 2012

இஃபா விருதுகள்: சிறந்த இந்தி இசையமைப்பாளர் ரஹ்மான்


சிங்கப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.
சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடந்தது. இதில் இந்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டன. கமல் ஹாசனின் விஸ்வரூபம் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் இந்தி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ராக்ஸ்டார் மற்றும் ஜிந்தகி நா மிலேகி தோ பாரா ஆகிய இந்தி படங்கள் விருதுகளை அள்ளின. சிறந்த நடிகருக்கான விருதை ராக்ஸ்டார் படத்துக்காக ரன்பீர் கபூரும், சிறந்த நடிகைக்கான விருதை தி டர்ட்டி பிக்சருக்காக வித்யா பாலனும் பெற்றனர்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ராக்ஸ்டார் படத்திற்கு இசையமைத்ததற்காக இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கிடைத்தது. மேலும் இந்தி சிங்கம் படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான விருது பிரகாஷ் ராஜுக்கு கிடைத்தது.
பிரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ராவுக்கு 2 விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடையநல்லூரில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை


கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் காணப்பட்டு வரும் நிலையில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக வாறுகால் சுத்தப்படுத்தும் பணியில் தேக்கம் காணப்படுகிறது. தனியார் துப்புரவு கான்ட்ராக்ட் பணிக்காலமும் முடிவடைந்து விட்டதால் சுகாதாரகேட்டால் மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கடையநல்லூரில் இருந்து தான் பரவியதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த காய்ச்சல் பாதித்து கடையநல்லூரில் மட்டும் 8 பேர் பலியாகியுள்ளனர். காய்ச்சல் பாதித்து ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரம் மருத்துவத்துறையினரும் தீவிரமாக மேற்கொண்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் நோயின் வேகம் பரவலாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையில் தமிழக முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் விதமாக அரசு ஆஸ்பத்திரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 5 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடையநல்லூரில் அமைச்சர்கள் டாக்டர் விஜய், செந்தூர்பாண்டியன் மற்றும் மருத்துவம், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.விழிப்புணர்வு பேரணியில் சுகாதார துறை அமைச்சர் விஜயிடம் நகராட்சி பகுதியில் காணப்படும் சுகாதாரக்கேடுதான் டெங்கு காய்ச்சலுக்கு முக்கியமாக அமைந்துள்ளது என பொதுமக்கள் சார்பில் அதிகளவில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் நகராட்சி பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்திட சுகாதார மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சியில் தற்போது துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார பணிகள் தேக்கமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாறுகால் சுத்தப்படுத்தும் பணி, தெருக்கள் சுத்தம் செய்யும் பணிகள் போன்றவை பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன. இந்நகராட்சியை பொறுத்தவரை தற்போது சுத்தப்படுத்தும் பணி நான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் முக்கிய பகுதிகளில் கூட மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வாறுகால் சுத்தம் பணி கடந்த ஒருவார காலமாக பெரும்பாலான தெருக்களில் மேற்கொள்ளப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
கடையநல்லூர் நகராட்சியை பொறுத்தவரை 45 ஆயிரத்து 456 ஆண்களும், 44 ஆயிரத்து 888 பெண்களும் வசித்து வருகின்றனர். நகராட்சியின் மொத்த பரப்பளவு 52.25 சதுர கி.மீ.ஆகும். 33 வார்டுகளை கொண்ட இந்நகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்பகுதிகள் 11 ஆகும். இவற்றில் குடிசைப்பகுதியில் மக்கள் தொகை 24 ஆயிரத்து 528 ஆக உள்ளது. கழிவுநீர் கால்வாயின் மொத்த நீளம் 99.20 கி.மீ. ஆகும்.இந்நகராட்சியில் மொத்தம் 26 ஆயிரத்து 129 வீடுகள் அமைந்துள்ள நிலையில் தெருக்களின் எண்ணிக்கை 229 ஆகும். ரோடுகளை பொறுத்தவரை மொத்த நீளம் 67.139 கி.மீ.ஆகும். 5 கட்டண கழிப்பிடங்கள், உரக்கிடங்குகள் இரண்டு, ஆடறுப்பு மனை 1 ஆகிய இந்நகராட்சியில் அமைந்துள்ளன.துப்புரவு பணியாளர்களை பொறுத்தவரை துப்புரவு அலுவலர் 1, துப்புரவு ஆய்வாளர் 2, துப்புரவு பணி மேற்பார்வையாளர் 2, துப்புரவு பணியாளர்கள் 88 பேர் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாளர்களை பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் கடையநல்லூர் நகராட்சிக்கு 100 ஆகும். தற்போது 12 பணியிடங்கள் காலியிடமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கடையநல்லூர் நகராட்சியில் துப்புரவு பணிகளை மேம்படுத்தும் பொருட்டு கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட 11 வார்டுகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் துப்புரவு பணிகள் தனியார் வசம் கான்ட்ராக்ட் வழங்கி செயல்படுத்தப்பட்டு வந்தது.கடந்த 1ம் தேதி தனியார் துப்புரவு பணி கான்ட்ராக்ட் முடிவு பெற்றுவிட்டன. 

அதற்கான காலக்கெடு நீடிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் துப்புரவு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக காணப்பட்டு வரும் நிலையில் துப்புரவு பணியில் கடுமையான முடக்கம் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வாறுகால்களில் சாக்கடை கழிவுநீர் நிரம்பி தெருக்களில் குட்டைபோல் தேங்கி கிடந்து கொசுக்களின் சங்கமம் அங்கு கொடிகட்டி பறக்கும் வகையில் காணப்படுகிறது.மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய முக்கிய இடங்களிலும் வாறுகாலில் சாக்கடை கழிவுநீரால் ஏற்படும் துர்நாற்றம் பொதுமக்களை பெரிதும் அச்சப்படுத்தி வருகிறது. கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திட போதிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரகேடு காரணமாக பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.