கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 4 டிசம்பர், 2012

கடையநல்லூர் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நேற்று தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கடையநல்லூர் சிவகுருநாதன், பண்டாரம், பிச்சாண்டி, மாரியப்பன், வெள்ளத்தாய், முனியாட்சி, காளி ஆகியோர் தலைமையில் பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோட்டாட்சியர் ராஜகிருபாகரனிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர் மாவடிக்கால் ரயில்வே பீடர் ரோடு கிருஷ்ணாபுரம் கிராமம் சர்வே எண் 1086,  1087ல் உள்ள புறம்போக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி குடியிருந்து வருகிறோம். வீட்டுவரி செலுத்தி வருகிறோம். மின் இணைப்பு பெற்றுள்ளோம். எங்களுக்கு இந்த வீட்டை தவிர வேறு வீடோ, மனையோ, நிலமோ ஏதும் இல்லை. நாங்கள் நகராட்சி பகுதியில் இருப்பதால் இதவரை எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்கவில்லை. ஏற்கனவே பட்டா சம்பந்தமாக கடந்த நவ.20ம் தேதி மனு அளித்துள்ளோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக