கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 25 டிசம்பர், 2012

கடையநல்லூர் பகுதிகளில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

கடையநல்லூர் நகர பகுதியில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கிட்டுராஜா, ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ், இணை செயலாளர் யாத்ரா பழனி, நகர இளைஞரணி செயலாளர் சுப்பையாபாண்டியன், நகர மாணவரணி செயலாளர் செங்கலமுடையார், கவுன்சிலர்கள் முத்துகிருஷ்ணன், முத்துப்பாண்டி, முத்தையாபாண்டி, ஆறுமுகம், மாரிமுத்து மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செய்தனர்.

கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி, இடைகால், திரிகூடபுரம், புன்னையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, ஒன்றிய மாணவரணி செயலாளர் திருப்பதி, யூனியன் துணைதலைவர் பெரியதுரை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் லட்சுமணன், பஞ்.,தலைவர்கள் மூக்கையா, செல்லப்பா, டெய்சிராணி வள்ளிக்குமார், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் பெருமையாபாண்டியன், வெள்ளத்துரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலரஞ்சலி செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக