கடையநல்லூரில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவி ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரியும். பொய்வழக்கு போட்ட SI சிவன் மீதும் DSP ஜமீம் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் கடையநல்லூர் முஸ்லிம்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ...
கடையநல்லூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்ற 70 வயது ஓய்வு பெற்ற ஆசிரியரான அந்த முதியவரின் மீது குடி போதையில் வந்த வேல்சாமி என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தால் இடித்ததும் இல்லாமல். முதியவரை தவறாக பேசியதும் அவர் மீதே வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார் . இந்த பொய் புகாரை விசாரிக்காமல் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட காவி சிந்தனை கொண்ட SI சிவன் என்பவர் பொய் வழக்கு பதிவு செய்தார் இவ்வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்தில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற ஒய்வு பெற்ற ஆசிரியரின் மகன் V.K.முஹைதீன் பிள்ளை அவர்களையும் வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காவல் துறையின் இந்த அராஜக செயலை கண்டித்தும் ஆள்தூக்கி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் . கடையநல்லூர் முஸ்லிம்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ..இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ஹாஜா நூஹ் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் .அவர் தன உரையில் காவல் துறையை எச்சரிக்கும் பொருட்டும் ஆள்தூக்கி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் உரை நிகழ்த்தினார் .இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் ,நடுநிலையாளர்களும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பையும் எச்சரிக்கையும் வெளிப்படுத்தினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக