கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 12 நவம்பர், 2012

கடையநல்லூரில் அரசு பெண் ஊழியர் கள்ளக்காதலனுடன் உல்லாசம்: நேரில் பார்த்த கணவனுக்கு கத்திக்குத்து

தென்காசி அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 24). இவரது மனைவி அலிபாத்திமா (28). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அலிபாத்திமாவின் சொந்த ஊர் கடையநல்லூர் என்பதால் அங்கேயே இருவரும் வசித்து வந்தனர். 

இந்தநிலையில் அலிபாத்திமாவுக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவரான சுரேஷ்குமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. பொன்ராஜ் வீட்டில் இல்லாத சமயத்தில் சுரேஷ்குமார் அலிபாத்திமா வீட்டிற்கு வந்து அவருடன்உல்லாசம் அனுபவிப்பார். இதையறிந்த பொன்ராஜ் அலிபாத்திமாவையும், சுரேஷ்குமாரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் தங்களது கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

நேற்று காலை பொன்ராஜ் சவாரிக்காக வெளியே சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்த போது அங்கு சுரேஷ்குமாரும், அலிபாத்திமாவும் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்தனர். இதை நேரில் பார்த்த பொன்ராஜ் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் சுரேஷ்குமாரை சத்தம் போட்டு வெளியே செல்லுமாறு கூறினார்.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுரேஷ்குமார் கத்தியால் பொன்ராஜை குத்தினார். இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் பொன்ராஜின் மனைவி அலிபாத்திமாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

அலிபாத்திமா சங்கரன்கோவிலில் ஊட்டசத்து பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் இதுவரை 3 பேரை திருமணம் செய்துள்ளார். பொன்ராஜ் 4-வது கணவர் ஆவார். முதல் கணவர் அலிபாத்திமாவின் நடத்தை சரியில்லாததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 2-வதாக மேலகரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை திருமணம் செய்தார். அவரும் அலிபாத்திமாவின் நடத்தை சரியில்லாததன் காரணமாக பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து 3-வதாக ஈரோட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரை அலிபாத்திமா திருமணம் செய்தார். அவருடன் 1 வருடம் வாழ்ந்தார். பின்னர் அவருடன் வாழ பிடிக்காததால் அவரை பிரிந்து கடையநல்லூருக்கு வந்து விட்டார். அங்கு வந்தவர் வாலிபர்கள் சிலருடன் பழகினார். சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு லாட்ஜ்க்கு வரவழைத்து விபசாரமும் செய்து வந்தார். அப்போது பொன்ராஜூடன் பழக்கம் ஏற்பட்டதையடுத்து அவரை 4-வதாக திருமணம் செய்தார்.

அலிபாத்திமாவுக்கு அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் பலருடன் பழக்கம் இருந்து வந்தது. அதிகாரிகளின் பழக்கத்தை பயன்படுத்தி வேலைக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தார். 2 மாதம், 3 மாதம் என விடுமுறை எடுத்து வாலிபர்கள் பலருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார்.

தென் மாவட்டம் முழுவதும் அவர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது ஏற்பட்டு வரும் மின்தடையை பயன்படுத்தி வாலிபர்கள் பலரை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவிப்பார். நேற்றிரவு ஏற்பட்ட மின்தடையின் போது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கவே அவர் கணவனிடம் சிக்கி கொண்டார்.

அலிபாத்திமாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் யார் யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக