கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 29 நவம்பர், 2012

கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார் அணையில் ஒரே நாளில் 8 அடி உயர்வு

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8அடி உயர்ந்துள்ளது.
 அடவிநயினார் அணையின் மொத்தக் கொள்ளளவு 132 அடி. இதில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 74 அடி அளவில் தண்ணீர் இருந்தது. செவ்வாய்க்கிழமை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புதன்கிழமை காலை நிலவரப்படி 8 அடி உயர்ந்து 82 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 தற்போது விநாடிக்கு 170 கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயத்துக்காக விநாடிக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக