கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 29 நவம்பர், 2012

கடையநல்லூரில் வாடகை பைக்குகளால் விபத்து: எஸ்.பி.யிடம் மனு

கடையநல்லூர் பகுதிகளில் வாடகை பைக்குகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்குமாறு எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடையநல்லூர் வட்டார பழைய இரு சக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத் தலைவர் சுலைமான், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனு:
 கடையநல்லூர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படும் தொழில் சில ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள் வாகனங்களைப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து உள்ளது. இவர்கள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்
கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக