கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 29 நவம்பர், 2012

கடையநல்லூர் அருகே சாலை விபத்துக்கள்

கடையநல்லூரில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்கள்

இது சமிபத்தில் கிருஷ்ணாபுரம் அருகே நடந்த சாலை விபத்து படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


கடையநல்லூரில் ஆட்டோ கவிழ்ந்து 4 மாணவர்கள் காயம்

கடையநல்லூர் பேட்டை ரைஸ்மில் தெருவை சேர்ந்த மாணவர்கள் அனுஷ் (16), மைதீன் (16), ரபீக் (16), செய்யது அகமது (16) இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகின்றனர். கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டிக்கு தினமும் மாலை டியூசனுக்கு சென்று வந்தனர்.

அதே போல் நேற்று மாலை பாவா (53) என்பவரின் ஆட்டோவில் டியூசனுக்கு சென்றனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பாவா சடன்பிரேக் போட்டார். இதனால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்து வந்த மாணவர்கள் 4 பேரும் காயம் அடைந்தனர்.

அவர்களில் மைதீன் பாளை அரசு ஆஸ்பத்திரியிலும், ரபீக், செய்யது அகமது ஆகிய இருவரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியிலும், அனுஷ் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார் அணையில் ஒரே நாளில் 8 அடி உயர்வு

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள அடவிநயினார் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8அடி உயர்ந்துள்ளது.
 அடவிநயினார் அணையின் மொத்தக் கொள்ளளவு 132 அடி. இதில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 74 அடி அளவில் தண்ணீர் இருந்தது. செவ்வாய்க்கிழமை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புதன்கிழமை காலை நிலவரப்படி 8 அடி உயர்ந்து 82 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 தற்போது விநாடிக்கு 170 கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயத்துக்காக விநாடிக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


கடையநல்லூரில் வாடகை பைக்குகளால் விபத்து: எஸ்.பி.யிடம் மனு

கடையநல்லூர் பகுதிகளில் வாடகை பைக்குகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்குமாறு எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடையநல்லூர் வட்டார பழைய இரு சக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத் தலைவர் சுலைமான், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனு:
 கடையநல்லூர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படும் தொழில் சில ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள் வாகனங்களைப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து உள்ளது. இவர்கள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்
கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

புதன், 28 நவம்பர், 2012

நண்பர் கலீல் திருமண அழைப்பிதழ்

நண்பர் கலீல் திருமண அழைப்பிதழ்



நண்பர்  கலீலுர் ரஹ்மான் -னின்  திருமண நல்வாழ்விற்காக  இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலான அல்லாஹ் உங்கள் இருவரையும் இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!

பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!

பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் அதிகரித்து வரும் சுகாதார சீர்கேடு

கடையநல்லூர் பகுதியில்  நகராட்சி நிர்வாகம் மூலம் குப்பைகள் ஆங்காங்கே குவிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது. 
கடையநல்லூர் நகராட்சி நெல்லை மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நிலை நகராட்சியாகும். இங்கு  குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் டெங்கு உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் கடந்த 3 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். தற்போதும் இப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 
 கடையநல்லூர் நகராட்சியில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதாரம் கேள்விகுறியாகி வருகிறது. இதனி தவிர்க்க சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
இதற்காக கடையநல்லூர் நகராட்சி மூலம் போகநல்லூர் பகுதியில் ரூ.50 லட்சம் செலவில் உரக்கிடங்கு உருவாக்கப்பட்டது. 
ஆனால் தற்போது கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அள்ளி போகநல்லூர் கொண்டு செல்லாமல் ஊருக்குள் கொட்டி வைத்துள்ளனர். குப்பைகளுடன் இறைச்சி கழிவுகளும் ஆங்காங்கே கொட்டப்படுவதால் தூற்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வியாழன், 22 நவம்பர், 2012

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய இசை ஆல்பம்!


சைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விரைவில் புதிய இசை ஆல்பம் ஒன்றை ரிலீஸ் செய்யப்போகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். அவருடைய இசையில் வெளியாகும் படங்கள் என்றாலே அந்தப் படத்துக்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி விடும்.
பெரும்பாலும் தமிழில் வெளியாகும் தனி ஆல்பம் ரசிகர்களிடையே பெரிய அளவில் எடுபடாமல் போய்விடும். ஆனால் 1997 - ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 'வந்தேமாதரம்' என்ற தனி இசை ஆல்பம் இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக அந்த ஆல்பத்தில் இடம்பெற்ற 'வந்தேமாதரம்' என்ற பாடல் இந்திய நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வெற்றிபெறும் நேரங்களில் இந்தியா முழுக்க பரவலாக இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டு அந்த ஆல்பம் பெரிய அளவில் ஹிட்டானது.
அந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக ஒரு தனி இசை ஆல்பத்தை ரிலீஸ் செய்யப்போகிறாராம்.
'மா தூஜே சலாம்' (Maa tujhe salaam) என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் எனக்கு மிகவும் சவாலான ஆல்பமாகவும் அதே சமயம் ரசிகர்களை கவரும் ஆல்பமாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஹிந்தியில் வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் தமிழிலும் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

கடையநல்லூர் பகுதியில் வைரஸ் காய்ச்சல் : பலர் பாதிப்பு

கடையநல்லூர் பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதித்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காய்ச்சலின் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.கடையநல்லூர், சொக்கம்பட்டி, இடைகால், நயினாரகரம், ஊர்மேலழகியான் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கடுமையான கை, கால் உழைச்சலுடன் 3 நாட்கள் வரை காணப்பட்டு வரும் வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் போல வேகமாக பரவி வருகிறது. அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கடுமையான பனிப்பொழிவும் இருந்து வருவதால் ஏராளமான வயோதிகர்கள், குழந்தைகள் சளித் தொந்தரவாலும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகளில் ஊசி மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் காய்ச்சல் பாதித்த நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.கடையநல்லூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோயாளிகளின் வசதிக்காக கடந்த சிலநாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. மேலக்கடையநல்லூரில் அமைந்துள்ள இந்த சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக தற்போது வைரஸ் காய்ச்சல் பாதித்து நூற்றுக்கணக்கானோர் வருகை தருகின்றனர். ஆனால் இந்த நோயாளிகளுக்கு மாத்திரை மட்டுமே வழங்கக் கூடிய நிலை தான் இருந்து வருவதாகவும், ஊசி மருந்து போடப்படுவதில்லை என நோயாளிகள் மத்தியில் புகார் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் ஊசி மருந்து வழங்கிட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதார பணிகள் துறையினருக்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளன.

செவ்வாய், 20 நவம்பர், 2012

கடையநல்லூரில் பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் சங்கம் நடத்திய ஒரு நாள் வேலை நிருத்தம்

கடையநல்லூரில் நேற்று நடந்த ஒரு நாள் வேலை நிருத்தம்

தனியார் சுயநிதி நர்சரி & பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் சங்கம் நடத்திய ஒரு நாள் வேலை நிருத்தம்






திங்கள், 12 நவம்பர், 2012

பெண்களே மருத்துவமனைக்கு தனியாக செல்லாதீர்

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், 

தனியார் மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். 

இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. 

ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

கடையநல்லூரில் அரசு பெண் ஊழியர் கள்ளக்காதலனுடன் உல்லாசம்: நேரில் பார்த்த கணவனுக்கு கத்திக்குத்து

தென்காசி அருகே உள்ள மேலகரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 24). இவரது மனைவி அலிபாத்திமா (28). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அலிபாத்திமாவின் சொந்த ஊர் கடையநல்லூர் என்பதால் அங்கேயே இருவரும் வசித்து வந்தனர். 

இந்தநிலையில் அலிபாத்திமாவுக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவரான சுரேஷ்குமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. பொன்ராஜ் வீட்டில் இல்லாத சமயத்தில் சுரேஷ்குமார் அலிபாத்திமா வீட்டிற்கு வந்து அவருடன்உல்லாசம் அனுபவிப்பார். இதையறிந்த பொன்ராஜ் அலிபாத்திமாவையும், சுரேஷ்குமாரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் தங்களது கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

நேற்று காலை பொன்ராஜ் சவாரிக்காக வெளியே சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்த போது அங்கு சுரேஷ்குமாரும், அலிபாத்திமாவும் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்தனர். இதை நேரில் பார்த்த பொன்ராஜ் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் சுரேஷ்குமாரை சத்தம் போட்டு வெளியே செல்லுமாறு கூறினார்.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுரேஷ்குமார் கத்தியால் பொன்ராஜை குத்தினார். இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் பொன்ராஜின் மனைவி அலிபாத்திமாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

அலிபாத்திமா சங்கரன்கோவிலில் ஊட்டசத்து பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அவர் இதுவரை 3 பேரை திருமணம் செய்துள்ளார். பொன்ராஜ் 4-வது கணவர் ஆவார். முதல் கணவர் அலிபாத்திமாவின் நடத்தை சரியில்லாததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 2-வதாக மேலகரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை திருமணம் செய்தார். அவரும் அலிபாத்திமாவின் நடத்தை சரியில்லாததன் காரணமாக பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து 3-வதாக ஈரோட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரை அலிபாத்திமா திருமணம் செய்தார். அவருடன் 1 வருடம் வாழ்ந்தார். பின்னர் அவருடன் வாழ பிடிக்காததால் அவரை பிரிந்து கடையநல்லூருக்கு வந்து விட்டார். அங்கு வந்தவர் வாலிபர்கள் சிலருடன் பழகினார். சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு லாட்ஜ்க்கு வரவழைத்து விபசாரமும் செய்து வந்தார். அப்போது பொன்ராஜூடன் பழக்கம் ஏற்பட்டதையடுத்து அவரை 4-வதாக திருமணம் செய்தார்.

அலிபாத்திமாவுக்கு அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் பலருடன் பழக்கம் இருந்து வந்தது. அதிகாரிகளின் பழக்கத்தை பயன்படுத்தி வேலைக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தார். 2 மாதம், 3 மாதம் என விடுமுறை எடுத்து வாலிபர்கள் பலருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்தார்.

தென் மாவட்டம் முழுவதும் அவர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது ஏற்பட்டு வரும் மின்தடையை பயன்படுத்தி வாலிபர்கள் பலரை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவிப்பார். நேற்றிரவு ஏற்பட்ட மின்தடையின் போது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கவே அவர் கணவனிடம் சிக்கி கொண்டார்.

அலிபாத்திமாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் யார் யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.